” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தமிழ்ப்பள்ளி…

வசந்தா ஜெகதீசன்
வரலாறு பலபாகம்
வழிகூறும் பலகாலம்
தமிழ்ப்பள்ளி உருவாக்கம்
தரணிக்கே தனிமகுடம்
உறவுகள் ஓன்றாகும்
உயிர்ப்பு மொழி தமிழாகும்
அடுத்த தலைமுறையும் அணிசேர வாய்ப்பாகும்
விழாக்களும் விழுமியமும் நிகழ்வாகி நிமிருமே!
கலைகள் பல கற்கும் கூடம்
தமிழ்ப்பள்ளி இதன் சாரம்
ஆன்றோரும் சான்றோரும் அணிசேர உருவாகி நிலமும் புலமும் இணைவாக வழிகூறும்
இலக்கிலே தமிழ் வாழும்
தமிழ்ப்பள்ளி உயிர்ப்பாகுமே!
நாளைய தலைமுறையும் நம்மினத்து முகவரியும் சாலவும் சிறப்புற சரித்திரம் பொறித்துயரும் தமிழ்ப்பள்ளி ஓர் ஆலயமே!
தகுந்த வழிகாட்டி தலைமுறை ஓன்றிணைக்கும்
பள்ளியின் பலசேவை பாருக்கு பெருங்கொடையே பயனாகி பாரெங்கும்தமிழ்வாழிநன்றி

Author: