மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

நகுலா சிவநாதன்

பட்டாம்பூச்சி

சிறகு விரிக்கும் பட்டாம் பூச்சி
சிந்தை திறக்கும் வனப்புக்கள்
உறவைத் தேடும் அன்பு உள்ளம்
உணர்வை பகிரும் பேருள்ளம்
நிறங்கள் காட்டும் எழில் வடிவம்
நிறைந்து பெருகும் பூச்சியினம்
பறந்து செல்லும் அழகு கண்டு
பாரில் மகிழ்வு கொள்கின்றோம்

பூக்கள் தேடி பறக்கும் காட்சி
புனிதம் காணும் அன்பினிலே
பாக்கள் வடிக்க பசுமை நிறைக்க
பாதை அமைக்கும் பூச்சியினம்
பூக்கும் மலரை நாடி யினமே
புனிதத் தேனை பருகிடுமே
தாக்கம் இல்லாத் தனியி னமேநீ
தடைகள் உடைத்து பறந்திடுவாய்

வண்ண அழகு கொண்ட சாதி
வடிவம் பலதும் பெற்றிடுவாய்
எண்ண போலச் சுற்றி நீயும்
எல்லா இடமும் போவாயே
கண்ணில் உன்னைக் காணும் அழகு
களிப்பு தோன்ற வைக்கிறதே
மண்ணில் தேனை எடுத்து நீயும்
மாற்றம் காணும் அழகினமே!

நகுலா சிவநாதன்1724

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading