” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நகுலா சிவநாதன்

பட்டாம்பூச்சி

சிறகு விரிக்கும் பட்டாம் பூச்சி
சிந்தை திறக்கும் வனப்புக்கள்
உறவைத் தேடும் அன்பு உள்ளம்
உணர்வை பகிரும் பேருள்ளம்
நிறங்கள் காட்டும் எழில் வடிவம்
நிறைந்து பெருகும் பூச்சியினம்
பறந்து செல்லும் அழகு கண்டு
பாரில் மகிழ்வு கொள்கின்றோம்

பூக்கள் தேடி பறக்கும் காட்சி
புனிதம் காணும் அன்பினிலே
பாக்கள் வடிக்க பசுமை நிறைக்க
பாதை அமைக்கும் பூச்சியினம்
பூக்கும் மலரை நாடி யினமே
புனிதத் தேனை பருகிடுமே
தாக்கம் இல்லாத் தனியி னமேநீ
தடைகள் உடைத்து பறந்திடுவாய்

வண்ண அழகு கொண்ட சாதி
வடிவம் பலதும் பெற்றிடுவாய்
எண்ண போலச் சுற்றி நீயும்
எல்லா இடமும் போவாயே
கண்ணில் உன்னைக் காணும் அழகு
களிப்பு தோன்ற வைக்கிறதே
மண்ணில் தேனை எடுத்து நீயும்
மாற்றம் காணும் அழகினமே!

நகுலா சிவநாதன்1724

Nada Mohan
Author: Nada Mohan