மௌனத்தின் மொழி 74

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 23-10-2025 பேச்சை இழந்த பின் பேசாத அத்தியாயம் அலையற்ற கடலாய் அமைதியின் நிலையாய் மௌனத்தின் மொழியாய் மனங்களின் உரையாடலாய் சொல்லமுடியாமல்...

Continue reading

நூலும் வேலும்

நகுலா சிவநாதன் வேலும் நூலும் வேரின் கூர்மையும் நூலின் அறிவும் வேண்டும் வாழ்விற்குத் தேவை என்றுமே! வேரின் கூர்மை அசுரரை அழித்து மக்களைக் காத்ததே நூலின்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 231
29/08/2023 செவ்வாய்
“வாக்கு”
————
விரைவில் தேர்தல் வந்திடும்
வீணர் வேட்டை தொடங்கிடும்
உறையில் பரிசும் கிடைத்திடும்
உங்கள் வாக்கும் விலைப்படும்!

கண்டதும் காதல் பிறந்திடும்
கணக்கிலா வாக்கு கிடைத்திடும்
கொண்டவர் பேச்சு மறந்திடும்
கோணிடும் நிலையும் வந்திடும்!

அருள் வாக்கும் விலைப்படும்
ஆசாமி பையும் நிறைந்திடும்
இருள் ஒருநாள் கலைந்திடும்!
இவர் யாரெனத் தெரிந்திடும்!

நல்வாக்கு நலமதும் தந்திடும்
நாடுவோர் குறையும் தீர்த்திடும்
செல்வாக்கு சிலபல அளித்திடும்
செயற்படும் விதத்தில் உதவிடும்!

வாக்கு கண்ணிலும் இருந்திடும்
வடிவாய் பார்த்தால் தெரிந்திடும்
நோக்கும் போது வெளிப்படும்
நோட்டம் விட்டிடப் புரிந்திடும்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பூமி தன்னைத்தானே சாமியாய்ச் சுற்றிச் சுற்றி சுழல்கிறதே வானமோ ஊற்றும் பனிப்புகாரில் பற்றி தலை முழுகுகிறதே ஈரந் துவட்டாததிலே ஜலதோஷ வடிநீரோ மழையாகப்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் அந்திப் பொழுது... வான் சிவந்து மெய்யெழுதும் வையமே அழகொளிரும் களிப்பிலே மனமொளிரும் காந்தமென புவி சிரிக்கும் மலரினங்கள் மையல்...

    Continue reading

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading