23
Oct
பாதை
ஜெயம்
வாழ்க்கை
ஒரு நேர்கோடல்ல
சில நேரம் வளைந்து நகரும்
சில நேரம் மறைந்து மறைக்கும்
ஒவ்வொரு நாளும்...
வசந்தா ஜெகதீசன்
அந்திப் பொழுது…
வான் சிவந்து மெய்யெழுதும்
வையமே அழகொளிரும்
களிப்பிலே மனமொளிரும்
காந்தமென புவி சிரிக்கும்
மலரினங்கள் மையல் கொள்ளும்
புள்ளினங்கள் கூடு வரும்
உழவர்கள் உளக்களிப்பில் நடை தளர மனை வருவார்
அந்தி வானம் அழகொளிரும்
மதி வானில் சித்திரமாய்
ஒளிருகின்ற உடுக்களின் பேரழகே பேராற்றல்
ஆதவனின் அடிவானம் ஒய்வெழுதும் தூரிகையால் துலங்க வைக்கும் மெய்யழகு
பேரழகே புவித் தாயின் புன்னகையில் செக்கச் சிவக்கும் அந்திப் பொழுதே ஆதாரம்!
நன்றி மிக்க நன்றி.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.