சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

பேரிடர்

ஜெயம்

வானம் கிழிந்து மழை கொட்டியதே
ஞாலம் நிறைந்து நீர் முட்டியதே
புயலென மாறிய காற்றதன் சீற்றம்
இயற்கையின் கோர தாண்டவ ஆட்டம்

நீர்வெள்ளத்துள் கிராம் மூழ்கி அழியுது
பார்க்காது மழையும் பேயாய் பொழியுது
காலனாய் மாறிக்கொண்டதே பயங்கரப் புயல்
பாழாய்ப்போன சூறாவளியின் மாய்த்திடும் செயல்

பேரிடர் ஒன்றால் பூமி கொந்தளித்தது
பாரின் மேலே உயிரும் தத்தளித்தது
அடியோடு பாறி மரங்களும் சாய்தன
குடிசைகள் மூழ்கி நீருக்குள் கரைந்தன

பேரிடர் தந்த வலிகளை நீக்க
பிரிவினை மறந்து மனிதமும் பூக்க
அந்த இருட்டிலும் ஒரு ஒளி
சிந்தவே பிறந்தது கருணையின் வழி

Author: