மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

அபிராமி கவிதாசன்.🙏

12.04.2022

சந்தம் சிந்தும் கவி வாரம்…. 170 /
விருப்பு தலைப்பு !

“ விடியாத இரவுகள் “

விடியாத இரவுகள்
விடியல் தந்திடுமா
துடித்திடும் உயிர்களின்
துன்பம் களைத்திடுமா /

அன்னமில்லை அடுப்பெரிக்க வழியில்லை
அடிப்படை அனைத்தும் தடை
மின்னல் ஒளியாய் நிலவாய்
மின்சாரம் வந்துபோகும் கதியாம் /

விவசாயம் நிலத்தினில்
விதைத்தவர்்உணவாளி
அவசர நிலைவாழ்
அடுக்கு மாடியினர் பட்டினி /

சின்னஞ்சிறிய அழகிய தீவு
செந்தமிழ் செப்பிடும் தமிழர்நாடு
புன்னகை தேசம்
புயலாய் சுருண்டதே /

மடிந்திட்ட என் தேசம்
மலர்ந்து மணம் தருமா
கடிந்திட்ட சாபத்தால்
கரைசேரா போய்விடுமோ /

தாயகத்தின் விடியலுக்காய்
தவித்திருக்கும் உயிர்கள் பல
தியாக உள்ளங்களே
தீர்வொன்று் தந்திடுவீர் /

நன்றி பாவை அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading