முயற்சியே பலம் முனைப்பே திடம்

செல்வி நித்தியானந்தன் முயற்சியே பலம் முனைப்பே திடம் மானிட பிறப்பின் மகத்தான பலமே மனஉறுதி என்றுமே திடமான முனைப்பே முயற்சியின் பயனே முற்றிலும்...

Continue reading

பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

அபிராமி கவிதாசன்.🙏

12.04.2022

சந்தம் சிந்தும் கவி வாரம்…. 170 /
விருப்பு தலைப்பு !

“ விடியாத இரவுகள் “

விடியாத இரவுகள்
விடியல் தந்திடுமா
துடித்திடும் உயிர்களின்
துன்பம் களைத்திடுமா /

அன்னமில்லை அடுப்பெரிக்க வழியில்லை
அடிப்படை அனைத்தும் தடை
மின்னல் ஒளியாய் நிலவாய்
மின்சாரம் வந்துபோகும் கதியாம் /

விவசாயம் நிலத்தினில்
விதைத்தவர்்உணவாளி
அவசர நிலைவாழ்
அடுக்கு மாடியினர் பட்டினி /

சின்னஞ்சிறிய அழகிய தீவு
செந்தமிழ் செப்பிடும் தமிழர்நாடு
புன்னகை தேசம்
புயலாய் சுருண்டதே /

மடிந்திட்ட என் தேசம்
மலர்ந்து மணம் தருமா
கடிந்திட்ட சாபத்தால்
கரைசேரா போய்விடுமோ /

தாயகத்தின் விடியலுக்காய்
தவித்திருக்கும் உயிர்கள் பல
தியாக உள்ளங்களே
தீர்வொன்று் தந்திடுவீர் /

நன்றி பாவை அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan