மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

அபிராமி கவிதாசன்.

17.05.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -175
தலைப்பு !
“தீயில்எரியும் எம்தீவு”

எரிகிறதே என்தீவென்று
ஏன்சிந்துகின்றீர் கண்ணீரை
அரிதங்கு வாழ்வதென்ற
அவலத்தை அறிந்தீரோ /

பெற்றதாய் வயிறெல்லாம்
பற்றியே எரிந்து
வற்றாத நதியாகி
வடிந்ததே விழிநீர் /

ஓடியும் உயிர்தப்பி
ஒழியவும் முடியாது
வாடியே உயிர்விட்ட
வயோதியர் சாபமோ /

அம்மா என்றோடி
அணைத்த பிள்ளைமுன்
அய்யோ என்றலரும்
அன்னையின் சபதமோ /

பெண்குலத்தை இழிவாக்கி
பெருந்துயரை உருவாக்கி
கண்முன்னே சூரையாடிய
கருணையற்ற பாவமோ /

தீயில் எரியும்
தீவின் கொடுமை
புவியினில் வேறெங்கும்
புலர்ந்திடல் ஆகாது /

கரியாகி குவியும்
கண்ணீர் உடல்கள்
எரிகிறதே ஈழம்
என்று தணியும் /

நன்றி வணக்கம்
பாவை அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading