அபிராமி கவிதாசன்.

17.05.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -175
தலைப்பு !
“தீயில்எரியும் எம்தீவு”

எரிகிறதே என்தீவென்று
ஏன்சிந்துகின்றீர் கண்ணீரை
அரிதங்கு வாழ்வதென்ற
அவலத்தை அறிந்தீரோ /

பெற்றதாய் வயிறெல்லாம்
பற்றியே எரிந்து
வற்றாத நதியாகி
வடிந்ததே விழிநீர் /

ஓடியும் உயிர்தப்பி
ஒழியவும் முடியாது
வாடியே உயிர்விட்ட
வயோதியர் சாபமோ /

அம்மா என்றோடி
அணைத்த பிள்ளைமுன்
அய்யோ என்றலரும்
அன்னையின் சபதமோ /

பெண்குலத்தை இழிவாக்கி
பெருந்துயரை உருவாக்கி
கண்முன்னே சூரையாடிய
கருணையற்ற பாவமோ /

தீயில் எரியும்
தீவின் கொடுமை
புவியினில் வேறெங்கும்
புலர்ந்திடல் ஆகாது /

கரியாகி குவியும்
கண்ணீர் உடல்கள்
எரிகிறதே ஈழம்
என்று தணியும் /

நன்றி வணக்கம்
பாவை அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading