மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

இரா்விஜயகௌரி

மௌனத்தைக் கிழித்தெறி

மௌனப்பூட்டுக்குள் உன்
எண்ணச்சிறகுகளை. சிறைப்படுத்தி
விரிந்த பரப்பின் எல்லைகள் தொடுவதற்கு
வாய்ப்பிருந்தும் வளமிழந்து முடங்குவதோ

ஊர் உலகுசமுதாயம் வரைமுறை
இவையெல்லாம் நீ தொடுப்பவை. தான்
உயர்ந்து நின்றால் உச்சி முகர்வதும்
அடங்கி நின்றால்அலட்சியமும் இயல்புதானே

கைகளுள் சென்று நிறைப்பாரென
பிரமித்து நின்றால்வெறும் பூஜ்ஜியம் நீ
விரல்களுக்கு பலம் கொடு
வீணர்கட்கு விடை பொடு

அதிசயங்களும். ஆச்சர்யங்களும் -உன்
செயல்களினால் மெருகு. பெறும்
நீயே உன்னை வினாக்குறிகளுக்குள்
பொறித்தெழுவாய் விழித்தெழுவார்கள்

என் ஒற்றைத்தடம் உருவாக்கிய பொறி
வெற்றித்தடம் விதைத்ததென்றால்
உன்னால் முடியாத்தேது நீ
பலம்மிக்கவள் அதை நீ உணர்ந்தெழுது

Nada Mohan
Author: Nada Mohan