” இலக்கியக்கலாநிதி பண்டிதமணி ஐயா “

“ இலக்கியக்கலாநிதி பண்டிதமணி ஐயா “கவி…ரஜனி அன்ரன் (B.A) 13.03.2025

சிந்தனைப்பட்டறை செம்மொழிக்காவலர்
நாவலர் மரபில்வந்த ஞானக்களஞ்சியர்
மட்டுவில் மண்ணில் உதித்தமகான்
இலக்கியவழி இருநாடகமென தந்த
உயர்தர பாடத்திட்டத்தின் ஆசான்
ஆசான்களுக்கெல்லாம் ஆசான் பேராசான் !

ஆசான் ஆக்கிய நூல்களெல்லாம்
அருந்தமிழுக்கு விருந்தாகி
எழுத்திலே புதுமை நடையிலே காத்திரமாய்
சொல்லுக்குப் பொருளுரைப்பார் கச்சிதமாய்
வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார் தமிழுக்காய் !

அள்ளஅள்ளக் குறையாத அறிவுச்சுரங்கம்
தெள்ளுதமிழ் நீரோடை செந்தமிழின் பாவலன்
அரைநூற்றாண்டுகள் தமிழோடு பயணித்து
பங்குனித்திங்கள் பதின்மூன்றிலே மறைந்தாரே
பண்டிதமணி ஐயாவிற்கு யாழ்வளாகமும்
பண்போடு கலாநிதிப் பட்டத்தினையும் வழங்கி
பண்பாடு காத்து நின்றதே !

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading