29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
உதிர்கின்ற இலைகளே……
ரஜனி அன்ரன்
உதிர்கின்ற இலைகளே……கவி…ரஜனி அன்ரன் (B.A) 17.10.2024
இயற்கையின் அழகான மாற்றம்
இலையுதிர் காலத்தின் தோற்றம்
காலநிலையும் மாற கடுங்குளிரும் வாட்ட
தருக்களின் வேர்களும் திறன் குன்ற
தண்ணீர் இழப்பைக் குறைத்திடவே
தருக்களும் இலைகளை உதிர்த்திடவே
தருவிற்கே உரமாகும் அதிசயம்
உதிர்கின்ற இலைகளே அச்சாரம் !
மண்ணில் உதிர்கின்ற இலைகளே
மண்ணிற்கு உரமாகப் போவதற்காய்
உருமாறி மஞ்சள் சிவப்பு பழுப்பு வண்ணமாகி
மண்ணில் போடும் வண்ணக் கோலமோ இது
உங்கள் உதிர்வு காலம்மாறும் செய்தியை
வாழ்வியல் மாற்றங்களை
வண்ணமாய் சித்தரிக்கிறதே !
அழகாய் உதிரும் இலைகளே
உம் வீழ்ச்சி முடிவல்ல
புதிதாய் மழையின் பொழிவால்
வளம் சேர்க்கும் துளியாய்
மீண்டும் நிலம் திரும்பும் வரவாய்
புதிய தருக்கள் முளைவிட
புதுவாழ்வை உருவாக்கும் தருக்களே
மீண்டும் வசந்தகாலத்தில் செழித்திடுவீரே !

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...