மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

உதிர்கின்ற இலைகளே……

ரஜனி அன்ரன்

உதிர்கின்ற இலைகளே……கவி…ரஜனி அன்ரன் (B.A) 17.10.2024

இயற்கையின் அழகான மாற்றம்
இலையுதிர் காலத்தின் தோற்றம்
காலநிலையும் மாற கடுங்குளிரும் வாட்ட
தருக்களின் வேர்களும் திறன் குன்ற
தண்ணீர் இழப்பைக் குறைத்திடவே
தருக்களும் இலைகளை உதிர்த்திடவே
தருவிற்கே உரமாகும் அதிசயம்
உதிர்கின்ற இலைகளே அச்சாரம் !

மண்ணில் உதிர்கின்ற இலைகளே
மண்ணிற்கு உரமாகப் போவதற்காய்
உருமாறி மஞ்சள் சிவப்பு பழுப்பு வண்ணமாகி
மண்ணில் போடும் வண்ணக் கோலமோ இது
உங்கள் உதிர்வு காலம்மாறும் செய்தியை
வாழ்வியல் மாற்றங்களை
வண்ணமாய் சித்தரிக்கிறதே !

அழகாய் உதிரும் இலைகளே
உம் வீழ்ச்சி முடிவல்ல
புதிதாய் மழையின் பொழிவால்
வளம் சேர்க்கும் துளியாய்
மீண்டும் நிலம் திரும்பும் வரவாய்
புதிய தருக்கள் முளைவிட
புதுவாழ்வை உருவாக்கும் தருக்களே
மீண்டும் வசந்தகாலத்தில் செழித்திடுவீரே !

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading