முன்னூறாய் முகிழ்ப்பு

வசந்தா ஜெகதீசன் முன்னூறாய் முகிழ்ப்பு.. திறமையின் தேடல் திசையெங்கும் விரவும் தீர்வுகள் எட்டிய திருப்பங்கள் நிகழும் சமூகத்தின் சாளரம்...

Continue reading

சித்திரைப்புத்தாண்டு

இரா.விஜயகௌரி புத்துயிர் விதைத்தொரு புதியதோர் ஆண்டு விளைந்தது பூமியிலே -இங்கு சித்திரை விரித்தெழும் சீரிய பாதையை செம்மையுள் பதித்தெழுவோம் எத்துணை...

Continue reading

உதிர்கின்ற இலைகளே……

ரஜனி அன்ரன்

உதிர்கின்ற இலைகளே……கவி…ரஜனி அன்ரன் (B.A) 17.10.2024

இயற்கையின் அழகான மாற்றம்
இலையுதிர் காலத்தின் தோற்றம்
காலநிலையும் மாற கடுங்குளிரும் வாட்ட
தருக்களின் வேர்களும் திறன் குன்ற
தண்ணீர் இழப்பைக் குறைத்திடவே
தருக்களும் இலைகளை உதிர்த்திடவே
தருவிற்கே உரமாகும் அதிசயம்
உதிர்கின்ற இலைகளே அச்சாரம் !

மண்ணில் உதிர்கின்ற இலைகளே
மண்ணிற்கு உரமாகப் போவதற்காய்
உருமாறி மஞ்சள் சிவப்பு பழுப்பு வண்ணமாகி
மண்ணில் போடும் வண்ணக் கோலமோ இது
உங்கள் உதிர்வு காலம்மாறும் செய்தியை
வாழ்வியல் மாற்றங்களை
வண்ணமாய் சித்தரிக்கிறதே !

அழகாய் உதிரும் இலைகளே
உம் வீழ்ச்சி முடிவல்ல
புதிதாய் மழையின் பொழிவால்
வளம் சேர்க்கும் துளியாய்
மீண்டும் நிலம் திரும்பும் வரவாய்
புதிய தருக்கள் முளைவிட
புதுவாழ்வை உருவாக்கும் தருக்களே
மீண்டும் வசந்தகாலத்தில் செழித்திடுவீரே !

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading