எங்க போறாய் புள்ள

Vajeetha Mohamed

எங்க போறாய் புள்ள
கலக் கம்ப தூக்கிக்கிட்டு
கட்டு முறுவு போற புள்ள

காட்ட முறிச்சு வெள்ளம்
பாய்து
கடலாட்டம் ஆறும் பொங்குது

அன்ன நட போட்டு ஆற்றுப்போனது போதும்
கூட்டுக்கு வெல்லன போ புள்ள

ஆறும் கடலும் கலந்து ஓடுது
மச்சான்
ஆறுநாளாய்ப் பேய்ந்த மழையில
அடித்து வந்த மீனும் ஓடையில
அசந்து கிடக்குது சேர்த்தில புரண்டு

வெள்ளத்தில மீன் புடிச்சி
கிழிக்கப்போறா
வெங்கிலாத்தி முதலையெல்லாம்

கட்டுப் புறண்டு கலகம் பண்ணுது
காட்டுப் பிரம்ம எடுத்து
வீசிக்கிப்போடுவேன்

வந்த வழியாலே திரும்பிப் பார்க்காம ஓடிப்போ புள்ள

எங்க கிடந்து இந்தச்சனியன்
வந்திச்சி்
என்ன தலையில அவர கட்டுனா என்ட சந்தோசம் முடிஞ்சுட்டு

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

Continue reading