மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

எழுத்தாளர் வாரம்

இரா.விஜயகௌரி

அன்னையின் மொழியாய்
அழகின் தமிழாய் அவர்
கிள்ளை மொழியில்அமிழ்தென
தெள்ளிய இழையாய் விதைத்த தமிழ்

சுவைத்து எடுத்து தொடுத்து மகிழ்ந்து
விதைத்து வியந்து வினைத்திறன் பின்னி
உணர்ந்து உயிர்ப்பை உரமாய் எழுதி
இளையவர் கரங்கள் பொறித்த தமிழ்

விரல்வழி நெய்து மொழிதனை ஆய்ந்து
மெய்ப்பட மெய்யினில் மெதுவாய் கலந்து
குரலினில்குழைய குலவிக்களித்து
குழந்தைகள் நாளும் இசைத்த தமிழ்

ஆம் பாமுகப் பந்தலில் பரவிச் செறிய
எழிலுடன் நிதமும் கொய்திடும் அழகை
ஆண்டுகள் இருபத்தெட்டினில் ஆங்கே
அற்புத பின்னலில்அளைந்த தமிழ்

நாளைய வாழ்வின்நற்பயிர் தம்மை
இன்றே செழிக்கமொழிவளம் இழைய
மொழிந்து மொழிந்து எழுந்த தமிழ்
வாழிய இவர் பணி வளமுடன் பேணிட

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading