நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

எழுத்தாளர் வாரம்

இரா.விஜயகௌரி

அன்னையின் மொழியாய்
அழகின் தமிழாய் அவர்
கிள்ளை மொழியில்அமிழ்தென
தெள்ளிய இழையாய் விதைத்த தமிழ்

சுவைத்து எடுத்து தொடுத்து மகிழ்ந்து
விதைத்து வியந்து வினைத்திறன் பின்னி
உணர்ந்து உயிர்ப்பை உரமாய் எழுதி
இளையவர் கரங்கள் பொறித்த தமிழ்

விரல்வழி நெய்து மொழிதனை ஆய்ந்து
மெய்ப்பட மெய்யினில் மெதுவாய் கலந்து
குரலினில்குழைய குலவிக்களித்து
குழந்தைகள் நாளும் இசைத்த தமிழ்

ஆம் பாமுகப் பந்தலில் பரவிச் செறிய
எழிலுடன் நிதமும் கொய்திடும் அழகை
ஆண்டுகள் இருபத்தெட்டினில் ஆங்கே
அற்புத பின்னலில்அளைந்த தமிழ்

நாளைய வாழ்வின்நற்பயிர் தம்மை
இன்றே செழிக்கமொழிவளம் இழைய
மொழிந்து மொழிந்து எழுந்த தமிழ்
வாழிய இவர் பணி வளமுடன் பேணிட

Nada Mohan
Author: Nada Mohan