ஏற்றமுறு முதலொலி எண்திசையும் தினமொலி..

வசந்தா ஜெகதீசன்
ஆண்டுகள் முப்பதியேழு சரிதத்தின் வலுவில்
சான்றுகள் பகிர்ந்து இன்றும் செய்திகள் தருகின்ற சன்றைஸ் முதலொலி வாழி
முடக்கமும் போரும் தாயக வாழ்வில் தவிப்புடன் உறவுகள் புலம்பெயர் நாட்டில்
தொலைத்தொடர்புகளற்ற காலத்தின் கடினம் நள்ளிரவு பதினொருமணிக்கு நம்தமிழ் ஒலிக்கும் ஒரேயொரு ஊடகம் சன்றைஸ் ஆவலும் தவிப்பும் மனதினில் தீயாய் அடங்குமே செய்தியின் பகிர்வால்
செய்தி சேகரிப்பே அன்றைய பொழுதில் அபாயத்தின் வழி தாயகத் தவிப்பை தவிர்த்ததே சன்றைஸ்
அன்றைய வரமாய் முதலொலி
முகிழ்ப்பு இன்றும் தொடரும்
முனைப்பின்வலுவே மறக்கத்தகுமாசன்றைஸ்முதலொலிநன்றி.

Author:

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading