ஏற்றமுறு முதலொலி எண்திசையும் தினமொலி..

வசந்தா ஜெகதீசன்
ஆண்டுகள் முப்பதியேழு சரிதத்தின் வலுவில்
சான்றுகள் பகிர்ந்து இன்றும் செய்திகள் தருகின்ற சன்றைஸ் முதலொலி வாழி
முடக்கமும் போரும் தாயக வாழ்வில் தவிப்புடன் உறவுகள் புலம்பெயர் நாட்டில்
தொலைத்தொடர்புகளற்ற காலத்தின் கடினம் நள்ளிரவு பதினொருமணிக்கு நம்தமிழ் ஒலிக்கும் ஒரேயொரு ஊடகம் சன்றைஸ் ஆவலும் தவிப்பும் மனதினில் தீயாய் அடங்குமே செய்தியின் பகிர்வால்
செய்தி சேகரிப்பே அன்றைய பொழுதில் அபாயத்தின் வழி தாயகத் தவிப்பை தவிர்த்ததே சன்றைஸ்
அன்றைய வரமாய் முதலொலி
முகிழ்ப்பு இன்றும் தொடரும்
முனைப்பின்வலுவே மறக்கத்தகுமாசன்றைஸ்முதலொலிநன்றி.

Author:

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading