ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

ஓ கார்த்திகையே!

நகுலா சிவநாதன்
ஓ கார்த்திகையே!

பனித்துளி புவியை நிரப்பிட
தனித்துளியாய் பாரை நிறைத்திடும்
கார்த்திகை திங்களே!

காரிருள் வானில் படர
கண்களில் குளிர்வு பெருக
மண்ணிலே மலரும் கார்த்திகைப்பூவே!
பூத்திருக்கிறாய் புனிதம் மேவ!

முருகன் புகழ்பாடும் கார்த்திகை
எங்கள் புனிதர் புகழ்பாடும் மாதமே
கார்த்திகை பூத்தாய் காரிருள் களைந்தாய்
நேர்த்தியாய் உன் கடமை ஆற்றுகிறாய்

ஓ கார்த்திகையே பூக்கிறாயா?
சாரல் மழையிலும் சாதிக்க துடிக்கிறோம்
மடிந்தவர்கள் வரவில்லை
விடியும் பொழுதுகளை கேட்கிறோம்
விந்தை உலகே விடிவு தருவாயா?
ஓ கார்த்திகையே பூக்கிறாயா?

நகுலா சிவநாதன் 1830

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading