நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

ஓ கார்த்திகையே!

நகுலா சிவநாதன்
ஓ கார்த்திகையே!

பனித்துளி புவியை நிரப்பிட
தனித்துளியாய் பாரை நிறைத்திடும்
கார்த்திகை திங்களே!

காரிருள் வானில் படர
கண்களில் குளிர்வு பெருக
மண்ணிலே மலரும் கார்த்திகைப்பூவே!
பூத்திருக்கிறாய் புனிதம் மேவ!

முருகன் புகழ்பாடும் கார்த்திகை
எங்கள் புனிதர் புகழ்பாடும் மாதமே
கார்த்திகை பூத்தாய் காரிருள் களைந்தாய்
நேர்த்தியாய் உன் கடமை ஆற்றுகிறாய்

ஓ கார்த்திகையே பூக்கிறாயா?
சாரல் மழையிலும் சாதிக்க துடிக்கிறோம்
மடிந்தவர்கள் வரவில்லை
விடியும் பொழுதுகளை கேட்கிறோம்
விந்தை உலகே விடிவு தருவாயா?
ஓ கார்த்திகையே பூக்கிறாயா?

நகுலா சிவநாதன் 1830

Author: