18
Dec
நேவிஸ் பிலிப்
வானில் புது வெள்ளி தோன்றி
சேதி ஒன்று சொன்னது
வானவராம் தேவ மைந்தன்
மண்ணகத்தில் பிறந்தாரம்
பாதையோர...
18
Dec
விசைத்தறி இவளோ……….
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
நெய்து நெயது நெய்தே தொடர்ந்து
கொய்து கொய்து குறுகிய கைகள்
எத்தனை விசையுடன் தொடர்ந்தன பொழுதுகள்
அத்தனை...
18
Dec
” தமிழின் ஞாயிறு “
-
By
- 0 comments
ரஜனி அன்ரன் (B.A) " தமிழின் ஞாயிறு " 18.12.2025
நல்லூர்தந்த ஞானச்சுடர்...
ஔவை
எல்லாம் இன்ப மயம்
————————————–
அன்பொன்றை ஆயுதமாய்
கொண்டு வாழ்ந்தால்
அகிலத்தில் துன்பங்கள்
என்றும் இல்லை
அணைக்கின்ற சொந்தங்கள்
எங்கும் உண்டேல்
அழிகின்ற உயிரினங்கள்
ஏது மண்ணில்
வன்மங்கள் என்றொன்று
வழக்கில் வேண்டாம்
வழிகாட்டத் தொழினுட்பம்
வரவும் வேண்டாம்
வாய்க்காலும் வரப்புகளும்
வசந்தம் வீசும்
வாய்ப்பேச்சில் அத்தனையும்
அழகாய்ச் சொல்லும்
இன்பத்தைத் தருகின்ற
இயற்கை ஒன்றே
இயல்பாக இருக்கின்ற
உண்மை அன்பு
ஈகின்ற அத்தனையும்
உலகில் செல்வம்
அதைமறந்து அழிக்கின்ற
எண்ணம் வேண்டாம்
மின்னுகின்ற அழகுகளோ
எல்லை இல்லை
கண்ணிரண்டு போதாது
காட்சி காண
மண்ணுலகில் இன்பத்தில்
மனிதர் வாழ
மற்றொன்று வேண்டாமே
இயற்கை போதும்.
ஒளவை.
Author: Nada Mohan
21
Dec
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பருவக் காலப் பாதிப்பிலே
பங்கு கண்டு பொங்குவாய்
உருவக் கோலச் சாதிப்பிலே
முங்கியபடியே மொங்குவாய்
கரும வினை...
20
Dec
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன்
சந்தகவி இலக்கம் _216
"பொங்குவாய்"
தை திங்கள் வந்ததடி தோழி
தரணிமெல்ல மகிழ்ந்தடி
ஆதவனார் வந்தாரடி!
பொங்கலிட்டோம்
பூஜை...
19
Dec
-
By
- 0 comments
அநீதியை எதிர்த்திங்கு பொங்குவாய்
நீதியின் பக்கம் தங்குவாய்
மெய்யுரைக்காது பல வாய்
பொய்யை...