நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

மாதரின் மறுபக்கம்

மலராக அவளை வர்ணித்தோர் பலர்
நிலவாக அவளை சித்தரித்தோர் பற்பலர்
மான் விழியாள் தேன் மொழியாள்
அன்னத்தின் நடையென புகழ்ந்தோர் இன்னும் பலர்

இவையெல்லாம் மட்டுமல்ல அவள்
அவள் ஒரு பிரபஞ்சம்
அவள் உயிரை படைக்கும் இறைவி
அவள் வாழ்வை வழங்கும் வள்ளல்

ஆனால் இந்த பூவும் புயலாக மாறும்
இந்த மென்மையும் எரிமலையாய் சீறும்
அநீதியை சந்திக்கும் போதெல்லாம்
அந்த அமைதி பூகம்பத்தை கக்கும்

ஜெயம்
13-03-2026

Author: