கணப்பொழுதில்……..

இரா.விஜயகௌரி
கணப்பொழுதில் விரைந்தெழுந்து
கரைந்தெழுதும். வாழ்வு- இங்கு
வினைப்பயனோ வினைத்திறனோ
அறிவறியாப் பொழுது்

கனத்தெழுதும் வாழ்வின் நொடி
கனவெனவே கலையும் -இங்கு
நிலையில்லா. இவ்வாழ்வினுக்கா-எம்
குழி பறிக்கும் கூட்டம்

ஆய்ந்தறிய முடியாத ஆய்வரங்கு
அழுதேதான் புரண்டாலும் மீளாத
உயிர் வதையின் ரணங்கள்
புரியாமல் ஓடுகின்றோம் புதைகின்றோம்

அழித்தெழுதி அனலெழுதி
சிதைத்தழித்து சீர்குலைத்து
மனம் வதைத்து. குணம் சிதைத்து
ஏன் ஏனின்னுமெங்கள் வாழ்வு

புரியாத மானுடனே இங்கு
நிலையில்லை. வாழ்வு
தினம் மனங்களிலே. வாழ்வு சமை
நிலை கொள்ள. வாழ்வாய்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading