மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

கணப்பொழுதில்……..

இரா.விஜயகௌரி
கணப்பொழுதில் விரைந்தெழுந்து
கரைந்தெழுதும். வாழ்வு- இங்கு
வினைப்பயனோ வினைத்திறனோ
அறிவறியாப் பொழுது்

கனத்தெழுதும் வாழ்வின் நொடி
கனவெனவே கலையும் -இங்கு
நிலையில்லா. இவ்வாழ்வினுக்கா-எம்
குழி பறிக்கும் கூட்டம்

ஆய்ந்தறிய முடியாத ஆய்வரங்கு
அழுதேதான் புரண்டாலும் மீளாத
உயிர் வதையின் ரணங்கள்
புரியாமல் ஓடுகின்றோம் புதைகின்றோம்

அழித்தெழுதி அனலெழுதி
சிதைத்தழித்து சீர்குலைத்து
மனம் வதைத்து. குணம் சிதைத்து
ஏன் ஏனின்னுமெங்கள் வாழ்வு

புரியாத மானுடனே இங்கு
நிலையில்லை. வாழ்வு
தினம் மனங்களிலே. வாழ்வு சமை
நிலை கொள்ள. வாழ்வாய்

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading