மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

கணப்பொழுதில்……..

இரா.விஜயகௌரி
கணப்பொழுதில் விரைந்தெழுந்து
கரைந்தெழுதும். வாழ்வு- இங்கு
வினைப்பயனோ வினைத்திறனோ
அறிவறியாப் பொழுது்

கனத்தெழுதும் வாழ்வின் நொடி
கனவெனவே கலையும் -இங்கு
நிலையில்லா. இவ்வாழ்வினுக்கா-எம்
குழி பறிக்கும் கூட்டம்

ஆய்ந்தறிய முடியாத ஆய்வரங்கு
அழுதேதான் புரண்டாலும் மீளாத
உயிர் வதையின் ரணங்கள்
புரியாமல் ஓடுகின்றோம் புதைகின்றோம்

அழித்தெழுதி அனலெழுதி
சிதைத்தழித்து சீர்குலைத்து
மனம் வதைத்து. குணம் சிதைத்து
ஏன் ஏனின்னுமெங்கள் வாழ்வு

புரியாத மானுடனே இங்கு
நிலையில்லை. வாழ்வு
தினம் மனங்களிலே. வாழ்வு சமை
நிலை கொள்ள. வாழ்வாய்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading