28
Aug
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
28
Aug
தேடும் உறவுகளே…
ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே.... 28.08.2025
தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின்...
28
Aug
பேரெழில் நாடு
நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு
ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட...
கமலா ஜெயபாலன்
தண்ணீர்க் குடத்தழகி
——————————-
தண்ணீர்க் குடத்தழகி
தாமரைப்பூ முகத்தழகி
மண்ணின் மணத்தழகி
மயக்கிடும் கண்ணழகி/
கொடியிடை அசைந்தாட
கொலுசு குதித்தாட
வடிவான வஞ்சியவள்
வாறாளே வாஞ்சையுடன்/
தண்ணீர் சரிந்தொழுக
தாவணியும் நனைந்தூற
கண்மை கரைந்தோட
காரிகையே பேரழகே/
சிலைபோல உன்னழகு
சீண்டுதடி என்மனதை
கலையாத உன்னுருவம்
கண்ணிற்குள் நிற்குதடி/
வண்ணக் கிளியழகே
வசந்த மலரழகே
எண்ணங்கள் தோன்றுதடி
என்னவளே என்மனசில்/
நெற்றி வகிடெடுத்து
நீவித் தலைமுடித்து
பற்றுடன் பாரேன்டி
பாவிமகன் நனேன்டி/
பஞ்சுவிரல் கையழகி
பவள உதட்டழகி
மஞ்சள் நிறத்தழகி
மச்சானைப் பரேண்டி/
இஞ்சி இடுப்பழகி
இதமான கண்ணழகி
பஞ்சியும் பராமல்
பாய்ந்தோடி வாயேண்டி
கமலா ஜெயபாலன்

Author: Nada Mohan
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...
30
Aug
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...
27
Aug
செல்வி நித்தியானந்தன்
நியதி
காலத்தின் நியதி
கட்டாயமாகும்
ஞாலத்தின் நியதி
மாறுபாடாகும்
பாலமாய் நியதி
இணைவாகும்
கோலமாய் நியதி
வேறுபாடாகும்
வாழ்வின் சக்கரம்
வரமாகும்
வீழ்வதும் உயர்வதும்
பாடமாகும்
விதியின் விளையாடல்
எதுவாகும்
விடை புரியாதென்பதே
இருப்பாகும்
மதியின்...