16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
கமலா ஜெயபாலன்
தண்ணீர்க் குடத்தழகி
——————————-
தண்ணீர்க் குடத்தழகி
தாமரைப்பூ முகத்தழகி
மண்ணின் மணத்தழகி
மயக்கிடும் கண்ணழகி/
கொடியிடை அசைந்தாட
கொலுசு குதித்தாட
வடிவான வஞ்சியவள்
வாறாளே வாஞ்சையுடன்/
தண்ணீர் சரிந்தொழுக
தாவணியும் நனைந்தூற
கண்மை கரைந்தோட
காரிகையே பேரழகே/
சிலைபோல உன்னழகு
சீண்டுதடி என்மனதை
கலையாத உன்னுருவம்
கண்ணிற்குள் நிற்குதடி/
வண்ணக் கிளியழகே
வசந்த மலரழகே
எண்ணங்கள் தோன்றுதடி
என்னவளே என்மனசில்/
நெற்றி வகிடெடுத்து
நீவித் தலைமுடித்து
பற்றுடன் பாரேன்டி
பாவிமகன் நனேன்டி/
பஞ்சுவிரல் கையழகி
பவள உதட்டழகி
மஞ்சள் நிறத்தழகி
மச்சானைப் பரேண்டி/
இஞ்சி இடுப்பழகி
இதமான கண்ணழகி
பஞ்சியும் பராமல்
பாய்ந்தோடி வாயேண்டி
கமலா ஜெயபாலன்
Author: Nada Mohan
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...
19
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல 341
"இனிமை"
இல்லற வாழ்வில்
நல்லறம் இனிக்க
நானிலம்
எம்மை வாழ்த்துவது இனிமமை!
பிள்ளைகளின் வளர்ச்சி...
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...