ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

கல்லறைகள் திறக்கும்

ராணி சம்பந்தர்

கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப் பூமிக்கு வருந்தியே
பாடடுபட்டுப் போரிட்டதே

பீறிட்ட வல்லூறில் சிக்கிச்
சின்னாபின்னமாகப்பட்டு
தவியாய்த் தவித்த உயிர்
நீத்ததில் சொல்லணாத்
துயரிட்டது

வேரிட்ட கல்லறைகளே
காணாமல் போனதிலே
புல்லறைகள் ஆகிப் புல்,
பூண்டுகள் பூத்திட்டதே

துயிலும் மாவீரருக்கு வீரத்
தாயார் தூவிய பூக்களின்
தாகமதில் பிறக்கும் காவிய
ஓவியமதில் பயின்றதில்
புடைத்த புயங்கள் மூடியை
உடைத்துத் திடீரெனவே
கல்லறைகள் திறக்கும் .

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading