மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

கல்லறைகள் திறக்கும்

ராணி சம்பந்தர்

கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப் பூமிக்கு வருந்தியே
பாடடுபட்டுப் போரிட்டதே

பீறிட்ட வல்லூறில் சிக்கிச்
சின்னாபின்னமாகப்பட்டு
தவியாய்த் தவித்த உயிர்
நீத்ததில் சொல்லணாத்
துயரிட்டது

வேரிட்ட கல்லறைகளே
காணாமல் போனதிலே
புல்லறைகள் ஆகிப் புல்,
பூண்டுகள் பூத்திட்டதே

துயிலும் மாவீரருக்கு வீரத்
தாயார் தூவிய பூக்களின்
தாகமதில் பிறக்கும் காவிய
ஓவியமதில் பயின்றதில்
புடைத்த புயங்கள் மூடியை
உடைத்துத் திடீரெனவே
கல்லறைகள் திறக்கும் .

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading