கல்லறைகள் திறக்கும்

ராணி சம்பந்தர்

கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப் பூமிக்கு வருந்தியே
பாடடுபட்டுப் போரிட்டதே

பீறிட்ட வல்லூறில் சிக்கிச்
சின்னாபின்னமாகப்பட்டு
தவியாய்த் தவித்த உயிர்
நீத்ததில் சொல்லணாத்
துயரிட்டது

வேரிட்ட கல்லறைகளே
காணாமல் போனதிலே
புல்லறைகள் ஆகிப் புல்,
பூண்டுகள் பூத்திட்டதே

துயிலும் மாவீரருக்கு வீரத்
தாயார் தூவிய பூக்களின்
தாகமதில் பிறக்கும் காவிய
ஓவியமதில் பயின்றதில்
புடைத்த புயங்கள் மூடியை
உடைத்துத் திடீரெனவே
கல்லறைகள் திறக்கும் .

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading