கல்லறைகள் திறக்கும்

ராணி சம்பந்தர்

கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப் பூமிக்கு வருந்தியே
பாடடுபட்டுப் போரிட்டதே

பீறிட்ட வல்லூறில் சிக்கிச்
சின்னாபின்னமாகப்பட்டு
தவியாய்த் தவித்த உயிர்
நீத்ததில் சொல்லணாத்
துயரிட்டது

வேரிட்ட கல்லறைகளே
காணாமல் போனதிலே
புல்லறைகள் ஆகிப் புல்,
பூண்டுகள் பூத்திட்டதே

துயிலும் மாவீரருக்கு வீரத்
தாயார் தூவிய பூக்களின்
தாகமதில் பிறக்கும் காவிய
ஓவியமதில் பயின்றதில்
புடைத்த புயங்கள் மூடியை
உடைத்துத் திடீரெனவே
கல்லறைகள் திறக்கும் .

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading