க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 175

தீயில் எரியும் எம் தீவு

சீதை போட்ட
சாபமடா
சீரழிந்து போகுதடா

சிங்கப்பூராக
இருந்த நாடு
சிவ சமாதி
ஆகுதடா

அனுமான்
அழித்த பூமி
நெருப்பாய் எரியுதுடா
அனைக்க
மனமில்லை
வர்ண மவராசாவுக்கு

போட்ட நெல்லு
புது நாத்தாகுமடா
போட்ட பாவம்
பூகம்பமாக வெடிக்கிறதடா!

காத்த தெய்வம்
கடும் கோபம்
கொள்ளுதடா
கடந்த தப்பை திருத்திடவே

கருனை மகராசா
ராமரும்
திரும்பி வருவாரா
வன வாசம் !!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading