மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

இனிய இரவு வணக்கம்
திரு.நடா மோகன் அவர்களே!
திரு. ப.வை ஜெயபாலன் அவர்களே !
மற்றும் பாமுக உறவுகளே!
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு!
ஆடி மகளே ஆடியும்வா! (அறுசீர் விருத்தம்)

ஆடிப் பிறப்பு நாளினிலே
ஊரில் பெரிய கொண்டாட்டம்
கூடிக் கூழும் குடித்திடவே
குடும்பம் ஒன்றாய் இணைந்திடுமே
தேடி ஓடிச் சென்றிடுவர்
தெய்வத் துணையை வேண்டிடத்தான்
தேடி விதையும் விதைத்திடுவர்
தேசம் மகிழப் பகிர்ந்திடுவர்!

நெஞ்சம் எல்லாம் ஏக்கங்கள்
நிறைந்தே கிடக்கு உணர்வாயோ
பஞ்சம் இல்லா வாழ்வொன்று
பாரில் கொண்டு வந்திடுவாய்
நஞ்சை புஞ்சை நிலமெல்லாம்
நன்றே விளைச்சல் தந்திடவே
மிஞ்சும் நாட்கள் மகிழ்வுடனே
மிடிகள் அகன்று வாழ்ந்திடலாம்!

பட்டம் விடவே ஆடியிலே
பள்ளிச் சிறுவர் பெரியோரும்
கொட்டன் அடித்தே மகிழ்ந்திடுவர்
கொக்கன் பாம்பு பட்டங்கள்
வட்டம் போடும் வானத்தில்
வண்ண வண்ணக் கோலத்தில்
அட்ட திக்கும் ஆர்ப்பரிக்க
ஆடி மகளே

ப.வை.அண்ணா உங்கள் பணி பாரிய பணி. மிகுந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக!
திரு.நடா மோகன் அவர்களே! களம் தந்து உற்சாகப்படுத்தும் உங்களுக்கு மிக்க மிக்க நன்றி கூறி
அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading