” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

இனிய இரவு வணக்கம்
திரு.நடா மோகன் அவர்களே!
திரு. ப.வை ஜெயபாலன் அவர்களே !
மற்றும் பாமுக உறவுகளே!
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு!
ஆடி மகளே ஆடியும்வா! (அறுசீர் விருத்தம்)

ஆடிப் பிறப்பு நாளினிலே
ஊரில் பெரிய கொண்டாட்டம்
கூடிக் கூழும் குடித்திடவே
குடும்பம் ஒன்றாய் இணைந்திடுமே
தேடி ஓடிச் சென்றிடுவர்
தெய்வத் துணையை வேண்டிடத்தான்
தேடி விதையும் விதைத்திடுவர்
தேசம் மகிழப் பகிர்ந்திடுவர்!

நெஞ்சம் எல்லாம் ஏக்கங்கள்
நிறைந்தே கிடக்கு உணர்வாயோ
பஞ்சம் இல்லா வாழ்வொன்று
பாரில் கொண்டு வந்திடுவாய்
நஞ்சை புஞ்சை நிலமெல்லாம்
நன்றே விளைச்சல் தந்திடவே
மிஞ்சும் நாட்கள் மகிழ்வுடனே
மிடிகள் அகன்று வாழ்ந்திடலாம்!

பட்டம் விடவே ஆடியிலே
பள்ளிச் சிறுவர் பெரியோரும்
கொட்டன் அடித்தே மகிழ்ந்திடுவர்
கொக்கன் பாம்பு பட்டங்கள்
வட்டம் போடும் வானத்தில்
வண்ண வண்ணக் கோலத்தில்
அட்ட திக்கும் ஆர்ப்பரிக்க
ஆடி மகளே

ப.வை.அண்ணா உங்கள் பணி பாரிய பணி. மிகுந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக!
திரு.நடா மோகன் அவர்களே! களம் தந்து உற்சாகப்படுத்தும் உங்களுக்கு மிக்க மிக்க நன்றி கூறி
அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.

Nada Mohan
Author: Nada Mohan