சாமினி துவாரகன்

செருப்பற்ற கால்களும்
ஓட்டை விழுந்த கூரையும்
ஓயாது காத்து நிற்கும்
ஓர் நாள் மாறுமென்று…..

ஒட்டிப் போன வயிறும்
ஓட்டையான சட்டையும்
ஓலமிட்டு அடங்கியிருக்கும் ஓர் காலம் வருமென்று….

எண்ணெய் அறியாத் தலையும்
பூனை தூங்கும் குசினிகளும்
போராடிக் களைத்திருக்கும்
பொழுது ஓர் நாள் விடியும் என்று…….

ஓடுகின்ற கடிகாரமும்
கிழிக்கப்படும் நாட்காட்டிகளும்
மறைமுகமாய் சொல்லி நிற்கும்
மாற்றம் இன்றில்லையேல்
நாளையேனும்……..

-சாமினி துவாரகன் –

Nada Mohan
Author: Nada Mohan