பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சாமினி துவாரகன்

செருப்பற்ற கால்களும்
ஓட்டை விழுந்த கூரையும்
ஓயாது காத்து நிற்கும்
ஓர் நாள் மாறுமென்று…..

ஒட்டிப் போன வயிறும்
ஓட்டையான சட்டையும்
ஓலமிட்டு அடங்கியிருக்கும் ஓர் காலம் வருமென்று….

எண்ணெய் அறியாத் தலையும்
பூனை தூங்கும் குசினிகளும்
போராடிக் களைத்திருக்கும்
பொழுது ஓர் நாள் விடியும் என்று…….

ஓடுகின்ற கடிகாரமும்
கிழிக்கப்படும் நாட்காட்டிகளும்
மறைமுகமாய் சொல்லி நிற்கும்
மாற்றம் இன்றில்லையேல்
நாளையேனும்……..

-சாமினி துவாரகன் –

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading