10
Mar
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
சிவதர்சனி
வியாழன் கவி 1628!
நிலை மாறும் பசுமை!
இயற்கை தரும் அருங்கொடைகள்
உயர்ந்த வாழ்வின் உயிர் நிலைகள்
பசுமை தங்கும் புவிப் பரப்பில்
பாழும் வரட்சி வருதல் முறையோ!
தாவரங்கள் தரு பயன்கள் தான்
தவிப்பின்றி எமை வாழவைக்கும்
உயிர் மூச்சும் உண்ணும் யாவும்
நன்றியோடு நோக்கச் செய்யும்!
உண்டவுடன் ஓடிச் செல்ல நாம்
இவ்வுலகில் விருந்தாளிகளல்ல
நன்றிக்கடன் செலுத்தவேண்டும்
நம் தலைமுறைக்கும் காக்க வேண்டும்!!
பசுமைப் புரட்சி செய்து பயிர்காத்த
பண்புடையர் செயல் கண்டோம்
வேளாண்மை காத்தவர் கை போல்
காத்திடவே விழிப்புக் கொள்வோம்!
காடு வெட்டி நாடாக்கும் காலம்
கண்டோம் இயற்கையின் சீற்றம்
பயிர் வளர்த்து விடிவு காண்போம்
பசுமை காத்துப் பயன் ஈவோம்!
சிவதர்சனி இராகவன்
12/5/2022
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...