சிவதர்சனி

வியாழன் கவி 1628!
நிலை மாறும் பசுமை!

இயற்கை தரும் அருங்கொடைகள்
உயர்ந்த வாழ்வின் உயிர் நிலைகள்
பசுமை தங்கும் புவிப் பரப்பில்
பாழும் வரட்சி வருதல் முறையோ!

தாவரங்கள் தரு பயன்கள் தான்
தவிப்பின்றி எமை வாழவைக்கும்
உயிர் மூச்சும் உண்ணும் யாவும்
நன்றியோடு நோக்கச் செய்யும்!

உண்டவுடன் ஓடிச் செல்ல நாம்
இவ்வுலகில் விருந்தாளிகளல்ல
நன்றிக்கடன் செலுத்தவேண்டும்
நம் தலைமுறைக்கும் காக்க வேண்டும்!!

பசுமைப் புரட்சி செய்து பயிர்காத்த
பண்புடையர் செயல் கண்டோம்
வேளாண்மை காத்தவர் கை போல்
காத்திடவே விழிப்புக் கொள்வோம்!

காடு வெட்டி நாடாக்கும் காலம்
கண்டோம் இயற்கையின் சீற்றம்
பயிர் வளர்த்து விடிவு காண்போம்
பசுமை காத்துப் பயன் ஈவோம்!
சிவதர்சனி இராகவன்
12/5/2022

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading