மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

சிவாஜினி சிறீதரன்

சந்த கவி
இலக்கம் _148

“நீர்மூலம்”

எங்கள் வாழ்வில்
மறக்க முடியாத
மறுக்க முடியாத நாள்!

பல குடும்பங்களில் நீட்சியாக
பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்
மருமக்கள் என விடுதலைக்கு விதையாகி போன நாள்!

ஈழ தமிழர் சாம்ராச்சியத்தில்
நாம் வாழ்ந்த காலத்தில்
அழிக்கப்பட்டது ஒழிக்கப்பட்டது நீர்மூலம்
ஆக்கப்பட்டது!
இனப்படுகொலை
போர் குற்றம்
இரசாயனக் கொண்டுகள் பயன்படுத்தி
நயவஞ்சகமாக இடித்து எரித்து அழிக்கப்பட்டதை கண்ட
கையறு நாள்!

வீரம் விவேகம்
விடுதலையின் தாகம் தீயாகம்
சுதந்திரம் சுயனலமற்ற
விலைபோகாத தன்னிகரில்லா
தலைவனையும்
ஈகையரையும் இளந்த நாள்!

தன் உயிரிலும் மேலான
தாய் நிலத்தை காதலித்து
இந்த மண் எங்களின் சொந்த மண்
அந்த மண்ணில்
நித்திய இளைப்பாறி
காவல் தெய்வங்களையும் பொதுமக்களையும் நீர்மூலமாக்கிய நாள்!

எங்கள் சொத்துக்கள்
சொந்தங்கள்
முதுசங்களை தோப்புக்களை தோண்டி
பாட்டியின் பாக்குரல் வரை
சிங்கள கைக்கூலிகளால் கையாளப்பட்ட் நீர்மூலம் ஆக்கிய நாள்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
18.05.24

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading