மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 190

“மாட்சிமை தங்கிய மகாராணி”

ஆயிரம் இராணியர் அவனியில் ஆட்சி செய்ததுண்டு
அரசரோடு அணைந்து அரியாசனம் பெற்றதுண்டு
ஆனாலும் இரண்டாம் எலிசபத்திற்கு இணையான மகாராணி
எவருண்டு? அவர்போல் என்னொருவர் தோன்றுவது எளிதன்று.

ஆதவன் அஸ்தமிக்காத பிருத்தானிய சாம்ராச்சியம்
இருபத்தாறு ஆட்டையில் மணிமுடி சுமந்தது மக்கள் செய்த பெரும்பாக்கியம்
ஏழுபத்து ஆண்டுகள் செங்கோலாட்சியை போற்றி வளர்த்தவர்
பகைவரும் போற்றும் வண்ணம் ஆண்டு மறைந்தவர்

முப்பத்துநான்கு நாடுகள் அவர்கொடிகீழ் அடங்கி நின்றன
மகாராணி என்றால் இரண்டாம் எலிசபெத் என்றே நம்பி இருந்தன
மாட்சிமை தங்கிய மகாராணியும் பிருத்தானியப் பேரரசும்
வரலாறு சொல்லும் வழுவிலா பேருண்மை-மனிதகுலம்
உள்ளவரை அவர்தம் மாண்பு குன்றாது வாழ்ந்து வரும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading