பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

தொழிலாளி

அயராது அல்லும் பகலுமாய் உழைத்து
வியர்வை மழையில் அன்றாடங் குளித்து
தன்தோளிலே உலகைச் சுமப்பவன் தொழிலாளி
மண்தேசத்தை கட்டி ஆளும் முதலாளி

மண்ணைத் தோண்டி பொன்னை எடுத்தான்
விண்ணை முட்டும்  கட்டிடம் தொடுத்தான்
உண்டாக்கி அன்னத்தை பஞ்சத்தை ஒழித்தான்
உன்னையும் என்னையும் உயர்த்திட இளைத்தான்

இல்லாமை என்பதும் அவனாலே  இங்கில்லை
எல்லாமும் அவனாலே விண்ணிறைவன் தன்பிள்ளை
பாடுபட்டு உழைப்பைக் கொடுத்திடும் கரங்கள்
நாடுகளிற்கெலாம் தொழிலாளிகள் கிடைத்திட்ட வரங்கள்

செய்யும் தொழிலை தெய்வமாக்கிடும் பாட்டாளி
மெய்யிலுமவனே வாழ்க்கைக்கு உதவும் கூட்டாளி
மேதினத்தில் அவர் பெருமைகளைக் கூறுவார்
மேதினியில் அவனின்றி யார் பசியாறுவார்

ஜெயம்
28-05-2022

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading