ஜெயம் தங்கராஜா

தொழிலாளி

அயராது அல்லும் பகலுமாய் உழைத்து
வியர்வை மழையில் அன்றாடங் குளித்து
தன்தோளிலே உலகைச் சுமப்பவன் தொழிலாளி
மண்தேசத்தை கட்டி ஆளும் முதலாளி

மண்ணைத் தோண்டி பொன்னை எடுத்தான்
விண்ணை முட்டும்  கட்டிடம் தொடுத்தான்
உண்டாக்கி அன்னத்தை பஞ்சத்தை ஒழித்தான்
உன்னையும் என்னையும் உயர்த்திட இளைத்தான்

இல்லாமை என்பதும் அவனாலே  இங்கில்லை
எல்லாமும் அவனாலே விண்ணிறைவன் தன்பிள்ளை
பாடுபட்டு உழைப்பைக் கொடுத்திடும் கரங்கள்
நாடுகளிற்கெலாம் தொழிலாளிகள் கிடைத்திட்ட வரங்கள்

செய்யும் தொழிலை தெய்வமாக்கிடும் பாட்டாளி
மெய்யிலுமவனே வாழ்க்கைக்கு உதவும் கூட்டாளி
மேதினத்தில் அவர் பெருமைகளைக் கூறுவார்
மேதினியில் அவனின்றி யார் பசியாறுவார்

ஜெயம்
28-05-2022

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading