மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச
வசந்தம்

வின் வீதியில் கதிரவன் உலா
மண் மீதினிலே உற்சாகத் திருவிழா
வசந்தம் வந்திங்கு புமியில் தவழும்
எண்ணத்துள் இனியில்லா புத்துணர்வும் தழுவும்

வாட்டமெல்லாம் நீங்கவே வந்ததொரு காலம்
மீட்டிக்கொண்டே மகிழ்ச்சியை விரைந்தெழுமே கோலம்
ஒளிக்கதிர்கள் மண்ணுலகில் புதிதாக நடைபோடும்
குளிரை குவலயத்துள் விடாது தடைபோடும்

இலையாடை உடுத்திக்கொள்ளும் நிர்வாண மரங்கள்
மலையெல்லாம் புதுத்தோற்றம் வசந்தகால வரங்கள்
பூக்களை பூமிசெய்து எழிலையும் பெருக்கும்
ஆக்கியே வளங்களை இயற்கையும் செழிக்கும்

வரவேண்டும் வரவேண்டும் வசந்தமும் தேடி
தரவேண்டும் தரவேண்டும் நன்மைகள் கோடி
இயற்கையோடு மானிடரும் வளமதனை சேர்ப்பாரே
இயன்றளவு வசதிகொண்டு பாடுகளைத் தீர்ப்பாரே

ஜெயம்
16-06-2024

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading