” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச
வசந்தம்

வின் வீதியில் கதிரவன் உலா
மண் மீதினிலே உற்சாகத் திருவிழா
வசந்தம் வந்திங்கு புமியில் தவழும்
எண்ணத்துள் இனியில்லா புத்துணர்வும் தழுவும்

வாட்டமெல்லாம் நீங்கவே வந்ததொரு காலம்
மீட்டிக்கொண்டே மகிழ்ச்சியை விரைந்தெழுமே கோலம்
ஒளிக்கதிர்கள் மண்ணுலகில் புதிதாக நடைபோடும்
குளிரை குவலயத்துள் விடாது தடைபோடும்

இலையாடை உடுத்திக்கொள்ளும் நிர்வாண மரங்கள்
மலையெல்லாம் புதுத்தோற்றம் வசந்தகால வரங்கள்
பூக்களை பூமிசெய்து எழிலையும் பெருக்கும்
ஆக்கியே வளங்களை இயற்கையும் செழிக்கும்

வரவேண்டும் வரவேண்டும் வசந்தமும் தேடி
தரவேண்டும் தரவேண்டும் நன்மைகள் கோடி
இயற்கையோடு மானிடரும் வளமதனை சேர்ப்பாரே
இயன்றளவு வசதிகொண்டு பாடுகளைத் தீர்ப்பாரே

ஜெயம்
16-06-2024

Nada Mohan
Author: Nada Mohan