மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

பெருச்சாளிகள்

நாட்டையே நாசமாக்கிய ஊழல் பெருச்சாளிகள்
ஆட்டமாய் போட்டார்கள் அரசியல் போலிகள்
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்கு ஒப்பானவர்கள் அவர்கள்
கொள்ளையடித்தே நாட்டை குட்டிச்சுவராக்கியவர்கள் இவர்கள்

இதுவரை இவரது அட்டகாசமே ஓங்கி
எதுவரை தொடருமோவென குடிமக்களோ ஏங்கி
தம்பி அண்ணன் மகனென திருட்டு
தப்பு இவர்க்கு இல்லையொரு பொருட்டு

பெருச்சாளியாய் வளர்ந்து நாட்டை துளையிட்டவரை
திரும்பியே பார்த்தான் ஒருவன் இம்முறை
மீண்டும் தேசத்தை கட்டியெழுப்பும் எண்ணம்
தோன்றும் மாற்றங்கள் அவனாலே திண்ணம்

பழுவாக இருந்த பீடைகள் அகலட்டுமே
ஒழுங்கான ஆட்சியும் இலங்கையில் மலரட்டுமே
நம்நாடு எனக்கொண்டு செய்திடுவோம் அபிவிருத்தி
எம்மோட உறவுகளுள் காணலாமோ பிறத்தி

ஜெயம்
14-10-2024

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading