” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

பெருச்சாளிகள்

நாட்டையே நாசமாக்கிய ஊழல் பெருச்சாளிகள்
ஆட்டமாய் போட்டார்கள் அரசியல் போலிகள்
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்கு ஒப்பானவர்கள் அவர்கள்
கொள்ளையடித்தே நாட்டை குட்டிச்சுவராக்கியவர்கள் இவர்கள்

இதுவரை இவரது அட்டகாசமே ஓங்கி
எதுவரை தொடருமோவென குடிமக்களோ ஏங்கி
தம்பி அண்ணன் மகனென திருட்டு
தப்பு இவர்க்கு இல்லையொரு பொருட்டு

பெருச்சாளியாய் வளர்ந்து நாட்டை துளையிட்டவரை
திரும்பியே பார்த்தான் ஒருவன் இம்முறை
மீண்டும் தேசத்தை கட்டியெழுப்பும் எண்ணம்
தோன்றும் மாற்றங்கள் அவனாலே திண்ணம்

பழுவாக இருந்த பீடைகள் அகலட்டுமே
ஒழுங்கான ஆட்சியும் இலங்கையில் மலரட்டுமே
நம்நாடு எனக்கொண்டு செய்திடுவோம் அபிவிருத்தி
எம்மோட உறவுகளுள் காணலாமோ பிறத்தி

ஜெயம்
14-10-2024

Nada Mohan
Author: Nada Mohan