ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

தாயுமானவர் 62

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
05-06-2025

தந்தையானவரே தாயுமானவரே….
தரணியில் எம்மை தாங்கிப் பிடித்தவரே
உள்ளமதில் வெள்ளம் போல் பாசமாய்
உலா வருவீர்கள் எங்களுடன் நேசமாய்.

சொல்ல வார்த்தையில்லா பேரொளிப் பிழம்பே
சோதியாய் ஒளிரும் சுடரும் தானே
கனவுகளை மனதில் போட்டு உழைத்து
கடிதளவும் வெளியில் சொல்லா கலங்கரை விளக்கே.

எமக்கு மட்டும் தந்தையன்றி
அன்னைக்கும் தந்தையாகி
தருணமறிந்து தர்க்கம் விலக்கி
அருளும் அறிவும் எழுந்த ஆளுமையும்

அன்னைக்கு நிகரான அன்பின் பெருமை…
கண்ணுக்குள் இன்னும் தெரியுதப்பா..
கலங்கி நாமும் நிற்கின்றோம் தந்தையரே
கண்மணியாய் எமைக்காத்த தாயுமானவரே..

Jeba Sri
Author: Jeba Sri

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading