மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

திருமதி. அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்திம் சந்திப்பு வாரம்- 16.08.2022
184

தலைப்பு !
“தேடுகின்றோம் கண்பார்வை முன்னே”

எங்கே தொலைத்தோம் எம்உறவுகளை -என்றே
எண்ணி எண்ணி ஏங்கிதவிக்கும் நெஞ்சங்களே

வினாகொண்டு அழைக்கின்றோம்
விடைகள்மட்டும் கிடைக்கவில்லை
விலைபோயினரா எம்உறவுகள்
விலைமதிப்பற்ற நம்நாட்டிற்க்காக /

இரண்டாயிரம் நாட்கள் ஆகியும்
இதுவரையிலும் விடிவேதுமில்லை
இரவுபகலாய் எண்ணங்களை
இதயத்தில்சுமந்தபடி தேடுகின்றோம் /

உலகநாடுகளின் ஓரத்தில்
உலாவி வாழ்கின்றனரா
உயிரயே அர்ப்பணித்து
உறங்கினரா மீளாஉறக்கத்தில் /

தேடும் எம்உறவுகளை
தேடிதேடி அழைகின்றோம்
தேற்றிடவோ உறவும்இன்றி
தேய்பிறையாய் கரைகின்றோம் /
நன்றி 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading