மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

திருமதி. அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்திம் சந்திப்பு வாரம்- 16.08.2022
184

தலைப்பு !
“தேடுகின்றோம் கண்பார்வை முன்னே”

எங்கே தொலைத்தோம் எம்உறவுகளை -என்றே
எண்ணி எண்ணி ஏங்கிதவிக்கும் நெஞ்சங்களே

வினாகொண்டு அழைக்கின்றோம்
விடைகள்மட்டும் கிடைக்கவில்லை
விலைபோயினரா எம்உறவுகள்
விலைமதிப்பற்ற நம்நாட்டிற்க்காக /

இரண்டாயிரம் நாட்கள் ஆகியும்
இதுவரையிலும் விடிவேதுமில்லை
இரவுபகலாய் எண்ணங்களை
இதயத்தில்சுமந்தபடி தேடுகின்றோம் /

உலகநாடுகளின் ஓரத்தில்
உலாவி வாழ்கின்றனரா
உயிரயே அர்ப்பணித்து
உறங்கினரா மீளாஉறக்கத்தில் /

தேடும் எம்உறவுகளை
தேடிதேடி அழைகின்றோம்
தேற்றிடவோ உறவும்இன்றி
தேய்பிறையாய் கரைகின்றோம் /
நன்றி 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading