மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

நகுலா சிவநாதன்

மூங்கில்

புல்லின் இனமே மூங்கில்
புனிதம் ஆன நல்மரமே
வில்லாய் வளைத்தால் வளையும்
விரும்பி ஊத இசையாகும்
புல்லாங் குழலாய் நீயும்
புரிந்து பிறக்கும் நல்லோசை

நாற்பது அடியே வளர்வாய்
நான்கு திசையும் மிளிர்வாயே
ஊற்றாய் நீரை உறிஞ்சி
உணவாய்க் கமிழும் உலகினிலே
நாற்றாய் வளரும் திறனால்
நன்கு விளையும் விண்ணுயர!

பண்டா உண்ணும் உணவாய்
பரிந்து நிற்பாய் மண்ணின்மேல்
கண்டால் அழகுப் பச்சை
களிப்பாய் நிலைப்பாய் மிகுகாலம்
உண்டால் மருந்தாய் நிற்பாய்
உலகின் உயரம் நீயன்றோ!
தண்டால் அரும்பும் ஓசை
தளிர்த்துத் துளிர்க்கும் மரமேநீ!

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading