நினைவுகள் கனக்கின்றன..

வியாழன் கவி -2250

“நினைவுகள் கனக்கின்றன”
சுமந்த வயிறுகள் சுகமிழந்து
துயர் நிறைந்து கிடக்கிறது
சுழல் காற்று அடித்து ஓய்ந்த
வயல் வெளிபோல் எங்கும்
சின்னா பின்னமாய்க் கிடக்க
ஆண்டாண்டு காலமாய்
அழுதழுது வீங்கிய விழிகள்
கண்ணீர் தான் வற்றி போனது..

கல்லறைகளுக்குள் துயின்றவர்
செல்லரித்துப் போன ஏடுகள்
போலும் சிதைந்தழிந்து போக
வக்கிரத்துள் எதிரி படை
சர்வ நாசம் செய்து போயின
இருப்பவர் இன்னும் தேட
இருப்பறியா உறவுகள் நிலை
தொடர்கதை தானே பூமியில்
கனக்கும் நினைவுகள்
இன்னும் கனத்தபடி தொடருதே..
சிவதர்சனி இராகவன்
27/11/2025

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading