நினைவுகள் கனக்கின்றன ( 740)

நினைவுகள் கனக்கின்றன செல்வி நித்தியானந்தன்

கார்த்திகை வருகையில்
கடந்தகால நினைவுகள்
காலங்கள் மீளுகையில்
கனமாய் வாட்டிடும்

மறவரின் தியாகங்கள்
மாவீரனின் சான்றுகள்
மழையும் மலருமாய்
மண்ணிலே சேர்ந்திடும்

இனமதை மொழியதை
காத்திட்ட செல்வங்கள்
தம்முயிரை துச்சமென
எண்ணிய வீரர்கள்

காலத்தால் அழியாத
காவிய நாயகர்கள்
காலமெல்லாம் மறவாது
காசினிலே போற்றிடுவோம்

Author:

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading