சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

நல்லுறவு

ராணி சம்பந்தர்

நாலும் சேர்க்குமே நல்லுறவு
அல்லும் பகலுமே பாடுபடவே
கல்லும் கனியாகும் கூட்டுறவு

சொல்லும் செயலும் பல்லுறுதி
கொல்லும் கோளும் ,வாளுமே
தில்லுமுல்லாய் வல்லூறாகிட
தொல்லை ஆக்கும் வெட்டுறவு

வல்லவனுக்குப் புல்லே ஆயுதம்
இல்லாதவனில் சொல் காகிதம்
பொல்லாதவன் நம்பிக்கையும்
நில்லாதவனில் பெருமூச்சுமே
கல்லாதவனிலூறும் கண்ணூறு

ஆறிடவே ஒன்றிணையும் அன்பு,
கூறிடவே அணைக்கும் ஒற்றுமை,
தேறிடவே அமைதி, பரிவிரக்கம் ,
ஏறிடவே பெருமையோ சேர்த்திட
நல்லோரில் நாலு பேர் போற்றிடும்
நல்லுறவு ஆகுமே .

Author: