மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(76). 05/10/22
என் வகுப்பறையின் ஆளுமைகள்

அறியா வயதினிலே
வெண்மணல் பரப்பினிலே
விரல் பிடித்து எழுதுவித்து என்னை
வளர்வித்தோரின் ஆளுமைகள்

வகுப்பறைகளில் அமர வைத்து
உலகைக் காட்டியவர்கள்
உயர்ந்து நான் முன்னேற
கற்பித்து எனக்கு உரம் ஊட்டியவர்கள்

நலமான உளப் பாங்கும்
நேர்மையான எதிர் நோக்கும்
மனிதப் பண்பும் ஆன்மீக விழுமியமும் ஊட்டி
என்னை சீராக வளர்த்தவர்கள்

ஒழுங்கமைந்த இயல்புகள்
உணர்வுகள் சிந்தனைகள்
இலக்கியமும் தேன்தமிழும்
கல்வியறிவினிலே நான் பெற்ற மதிப் பெண்களும்

உங்களை நான் என்றும் மறந்தேனில்லை
உம் ஆளுமைகள் எம்மை விட்டு நீங்கவில்லை
உங்களிடம் பயின்ற நற் பண்புகளை
மறவாதென்றும் வாழ்வதே
நான் அளிக்கும் நன்றிக்காணிக்கை
உங்களுக்கு

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading