திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(76). 05/10/22
என் வகுப்பறையின் ஆளுமைகள்

அறியா வயதினிலே
வெண்மணல் பரப்பினிலே
விரல் பிடித்து எழுதுவித்து என்னை
வளர்வித்தோரின் ஆளுமைகள்

வகுப்பறைகளில் அமர வைத்து
உலகைக் காட்டியவர்கள்
உயர்ந்து நான் முன்னேற
கற்பித்து எனக்கு உரம் ஊட்டியவர்கள்

நலமான உளப் பாங்கும்
நேர்மையான எதிர் நோக்கும்
மனிதப் பண்பும் ஆன்மீக விழுமியமும் ஊட்டி
என்னை சீராக வளர்த்தவர்கள்

ஒழுங்கமைந்த இயல்புகள்
உணர்வுகள் சிந்தனைகள்
இலக்கியமும் தேன்தமிழும்
கல்வியறிவினிலே நான் பெற்ற மதிப் பெண்களும்

உங்களை நான் என்றும் மறந்தேனில்லை
உம் ஆளுமைகள் எம்மை விட்டு நீங்கவில்லை
உங்களிடம் பயின்ற நற் பண்புகளை
மறவாதென்றும் வாழ்வதே
நான் அளிக்கும் நன்றிக்காணிக்கை
உங்களுக்கு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading