எனையாளும் சூரியனோ………

இரா.விஜயகௌரி விடிகாலைச் சூரியனோ -இவள் விரித்தெழுதும் பாசவலை - நிதம் புன்னகையுள் கட்டி வைத்து புதிர் எழுதும் காரிகையாள் பரிவோடு...

Continue reading

நேரமாற்றம் வந்ததாலே 02.04.2026

செல்வி நித்தியானந்தன் நேரமாற்றம் வந்ததாலே குளிர்காலம் சென்றே கோடையும் வந்திடும் நேரமும் மாறியே தூக்கத்தை கலைத்திடும் அதிகாலை...

Continue reading

பட்ட மரம்

செல்வி. நித்தியானந்தன்
பட்ட மரம்

ஊஞ்சல் கட்டி
ஆடியதும்
ஊர் குடையாய்
குந்தவும்
ஊட்டம் கொண்டு
இருந்ததும்
உட்கார இடமும்
தந்ததும்

காற்றின் அசைவில்
வருடலும்
காணது போகவே
நெருடலும்
காண்போர் மனதில்
தேடலும்
காட்சி பொருளாய்
நிற்பதும்

பட்சிகளின் வாழ்வின்
இருப்பு
கிளையுடன் அடர்ந்த
வனப்பு
ஆனந்தமாய் அமர்ந்த
அன்று
பட்டாலும் பயனாய்
இன்று

விறகாய் சேவையில்
நன்று
விந்தையாய் இப்போ
பட்டதே மரமாய்

செல்வி. நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading