அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

பட்ட மரம்

செல்வி. நித்தியானந்தன்
பட்ட மரம்

ஊஞ்சல் கட்டி
ஆடியதும்
ஊர் குடையாய்
குந்தவும்
ஊட்டம் கொண்டு
இருந்ததும்
உட்கார இடமும்
தந்ததும்

காற்றின் அசைவில்
வருடலும்
காணது போகவே
நெருடலும்
காண்போர் மனதில்
தேடலும்
காட்சி பொருளாய்
நிற்பதும்

பட்சிகளின் வாழ்வின்
இருப்பு
கிளையுடன் அடர்ந்த
வனப்பு
ஆனந்தமாய் அமர்ந்த
அன்று
பட்டாலும் பயனாய்
இன்று

விறகாய் சேவையில்
நன்று
விந்தையாய் இப்போ
பட்டதே மரமாய்

செல்வி. நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading